Thursday, October 24, 2013

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பாண்டிச்சேரி ஸ்ரீகாலபைரவப் பெருமான்!!!





முண்டகன் என்னும் அரக்கனைக் கொன்ற பாவம் தீர,ஸ்ரீகாலபைரவப் பெருமான் இங்கே சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்;வடுகன் என்ற பெயர் ஸ்ரீகாலபைரவருக்கு உண்டு.வடுகர் இங்கே வழிபட்டதால் இந்த ஊருக்கு வடுகூர் என்ற பெயர் உண்டானது.இங்கே இருக்கும் தீர்த்தத்திற்கு வடுக தீர்த்தம் என்ற வாமதேவத் தீர்த்தம் என்று பெயர்.வடுகனுக்கு ஆண்ட பிள்ளையார் என்ற பெயர் ஆரம்பத்தில் இருந்தது.அதுவே ஆண்டார் கோவில் என்று மாறிவிட(மருவி விட) அதுவே இந்த ஊரின் பெயராகவும் மாறிவிட்டது.திருஞானசம்பந்தர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்துபாடியிருக்கிறார்.வடுககோலம் என்ற தலைப்பில் பாடப்பட்டிருப்பது இந்த ஆலயத்தைத் தான்!

கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியே ஸ்ரீகால பைரவரின் பிறந்த திதி ஆகும்.எனவே,இதை காலபைரவ அஷ்டமி என்றே அழைக்கிறோம்.

பாண்டிச்சேரியில் விழுப்புரம் டூ பாண்டிச்சேரி சாலையில் கண்டமங்கலம் வழியே செல்லும் பாதையில் திருவாண்டார் கோவில் அமைந்திருக்கிறது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வந்து இராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சகல வளங்களையும்,நலங்களையும் பெறுவர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment