Thursday, October 17, 2013

சுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்டை) பைரவர்!!!





புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் 6 கி.மீ.தூரத்தில் திருவரங்குளம் அமைந்திருக்கிறது.இந்த ஊரின் பழைய பெயரே பொற்பனைக்கோட்டை! பொற்பனை இருந்த இடத்தில் சிவலிங்கத்தைக்கண்ட அரசன் கோவிலையும் கோட்டையையும் கட்டியதாக செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன.
சுவாதியில் பிறந்தவர்கள் தனது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் இராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில்  இங்கே இருக்கும் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.ராகு காலம் துவங்கும்போது இங்குள்ள பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்போது பைரவ சஷ்டிக்கவசம் பாட வேண்டும்;இப்படி குறைந்தது ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு செய்துவிட்டால்,அனைத்துக் கர்மாக்களும் நீங்கி வளமோடு வாழ்வர் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!

No comments:

Post a Comment