Friday, October 18, 2013

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத பைரவர்!!!





காரைக்குடி நகராட்சிக்கு அருகில் பள்ளத்தூர் அமைந்திருக்கிறது.பள்ளத்தூர் அருகே இருக்கும் சூரக்குடியில் தேசிகநாதர்+ஆவுடைநாயகி திருக்கோவிலில் அமைந்திருக்கும் கதாயுதம் தாங்கியிருக்கும் பைரவப் பெருமானே கேட்டை நட்சத்திர பைரவர் ஆவார்.

இன்னொரு கேட்டை நட்சத்திர பைரவர் திருப்பத்தூரில் இருந்து சிவகெங்கை செல்லும் வழியில் திருக்கோட்டியூருக்கு முன்னதாக 1.6 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் திருமெய்ஞானபுரம்(T.வைரவன்பட்டி=திருக்கோட்டியூர் வைரவன்பட்டி) ஆகும்.
ராஜராஜசோழ மன்னனின் குல தெய்வம் இது.இந்தக் கோவிலில் முறைப்படி அனுமதி பெற்றப் பின்னரே தஞ்சை பெரிய கோவிலை கட்டினார்.இத்திருக்கோவிலானது 1500 ஆண்டுகள் பழமையானது.

ஜன்ம நட்சத்திர நாட்களில் இவர்களில் ஒருவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் கேட்டை நட்சத்திரக்காரர்கள் வளமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment