Tuesday, December 17, 2013

பூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி காலபைரவப்பெருமான்!!!


பிரம்மாவுக்கும்,விஷ்ணுவுக்கு யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது;அதனால் அண்ணாமலையில் அன்னப்பறவை வடிவெடுத்து பிரம்மா சதாசிவனின் முடியைக் காண மேலே நோக்கிப் பறந்தார்;வெண்வராகம் வடிவெடுத்து மஹாவிஷ்ணு சதாசிவனின் அடியைக் காண கீழே நோக்கி தோண்டிக் கொண்டே சென்றார்;பிரம்மா சதாசிவனின் முடியைக் காணாமலேயே தாழம்பூவின் துணையுடன் விஷ்ணுவிடம் பொய் சாட்சி சொல்லவைத்து,தானே பெரியவர் என்று பொய்யாக ஜெயித்தார்.இதனால்,கோபமுற்ற சதாசிவன் நெருப்புப்பிழம்பு வடிவில் இருந்து தெய்வ வடிவம் எடுத்து பிரம்மாவை சபித்தார்.

எனது முடியைக்காணாமலேயே கண்டதாகச் சொன்ன உன்னை பூலோகத்தில் யாரும் வழிபட மாட்டார்கள்;
எனது முடியை பிரம்மா கண்டார் என்று பொய் சாட்சி சொன்ன நீ இனிமேல் இறைவழிபாட்டிலிருந்து விலக்கப்படுவாய் என்று தாழம்பூவுக்கு சாபம் கொடுத்தார்.

இதனால்,ஒரு பிரளயம் முடியும் வரையிலும் பூமியில் பிரம்மாவுக்கான வழிபாடுகளும்,கோவிலில் பிரம்மா சிலை ஸ்தாபிப்பும் இல்லாமல் போயின;அடுத்து வந்த பிரம்மா(பூமியில் 485 கோடி வருடங்கள் ஆனால்,அது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்;இப்படி பிரம்மாவுக்கு 100 வயது ஆனால்,அவரது ஆயுள் முடிந்துவிடும்;அடுத்த புண்ணிய ஆத்மா பிரம்மா பதவியை ஏற்று படைப்புத் தொழிலைச் செய்வார்;பைரவ வழிபாட்டினை தொடர்ந்து சிலபல பிறவிகள் பின்பற்றுபவர்களே இப்படிப்பட்ட உயர்ந்த பதவியை எட்டுகிறார்கள்) சாபநிவர்த்திக்காக சதாசிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்;அதனால்,பிரம்ம பதவிக்கான சாபத்தை நிவர்த்திசெய்ய, பூலோகத்தில் காசிக்குச் சமமான அவிநாசிக்குச் சென்று வழிபட உபதேசம் செய்தார்.

இரண்டாவது பிரம்மா இன்றைய அவிநாசிக்கு வருகை புரிந்தார்;மூலவருக்கு அருகே ஒரு தண்டத்தை ஊன்றி திருக்குளம் உண்டாக்கினார்;கபிலை நதியை வரவழைத்தார்;அதில் தினமும் குளித்தார்;பஞ்சவில்வமரத்தை தோற்றுவித்தார்;அதன் அடியில் மேடையை அமைத்தார்;சிவ வழிபாட்டுமுறையை விவரிக்கும் முறைகளின் தொகுப்பே ஆகமம் ஆகும்.ஆகமவிதிப்படி,சதாசிவனை நோக்கி நூறு ஆண்டுகள் பூஜை புரிந்தார்;இறைவனாகிய சதாசிவன் மீண்டும் நேரில் வருகை புரிந்து என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்;

அதற்கு இரண்டாவது பிரம்மா, பிரம்ம பதவிக்குரிய சாபநிவர்த்தியை நீக்கும் படி சதாசிவனை வேண்டினார்.

அதன்படி,பிரம்மாவுக்குரிய சாபம் நீங்கியது;மீண்டும் படைப்புத்தொழிலைத் துவங்கினார்;

அதன்பிறகு,பிரம்மோற்சவம்  நடத்திட தேவர்களை வரவழைத்தார்;சித்திரை மாதம் மிருகசீரிட நட்சத்திர நாளில் ரிஷபக் கொடியேற்றி வைத்து பிரம்மோற்சவம் துவக்கினார்;பூர நட்சத்திரத்தில் சிங்கத் தீர்த்தத்தில் (11 நாட்கள் பிரம்மோற்சவம்) தீர்த்தம் கொடுத்து ரிஷபக் கொடியை இறக்கி பிரம்மோற்சவத்தை நிறைவு செய்தார்;
காசிக்கிணற்றின் அருகில் இரு காலபைரவர் இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்புக்குரிய மூர்த்திகளில் ஒருவர் ஆவார்.இவர் அற்புதமான சிற்பவடிவைத்தைக்கொண்டவர்.இவருக்கு மட்டும் தனியாக சகஸ்ரநாம துதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் திருப்பூருக்கும்,கோயம்புத்தூருக்கும் நடுவே அவிநாசி அமைந்திருக்கிறது.
திருப்பூரிலிருந்து 12 கி.மீ.தொலைவிலும்;கோவையிலிருந்து 40 கி.மீ.தொலைவிலும் அவிநாசி அமைந்திருக்கிறது.

பூராட நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் தமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் இங்கே அமைந்திருக்கும் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்;பிறகு,காலபைரவருக்கு அபிஷேகம் செய்து விட்டு,நேராக அவரவர் வீடு திரும்பவேண்டும்;தொடர்ந்து எட்டு பூராட நட்சத்திர நாட்களுக்கு இவ்வாறு பைரவ அபிஷேகம் செய்துவிட்டால் எதிர்காலம் வளமாகவும்.நிம்மதியாகவும்,நலமாகவும் இருக்கும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment