Thursday, October 3, 2013

பைரவர் வழிபாடுகளும்,கிடைக்கும் நன்மைகளும்



வழக்குகளில் வெற்றிபெற உதவும் பைரவர் வழிபாடு



சனிப்பிரதோஷநாட்களில்,பிரதோஷம் நிறைவடைந்ததும்,சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு தயிர் அன்னம் படைத்து,தம் பெயருக்கு(வழக்கு இருப்பவரின் பெயருக்கு)அர்ச்சனை செய்ய வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,தயிர்ச்சாதத்தை பிரதோஷத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டும்.வழக்கு முடியும் வரையிலும் இப்படி செய்ய வேண்டும்.(ஆனால்,ஓராண்டு இரண்டு அல்லது மூன்று சனிப்பிரதோஷம் தான் வருமே!)



திருமணத்தடை அகல உதவும் பைரவர் வழிபாடு



வெள்ளிக்கிழமைகளில் வரும் இராகுகாலத்தில் (காலை 10.30 முதல் 12) பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து,புனுகு பூசி,தாமரை மலர் அணிவித்து,அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு 8 அல்லது 17 அல்லது 26 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து (சில காரணங்களால் ஓரிரு வெள்ளிக்கிழமைகளில் விடுபட்டாலும்) செய்துவர,மனதுக்குப் பிடித்த (காதலித்திருந்தாலும்) வாழ்க்கைத்துணை அமையும்.



கணவன் மனைவி பிரிவினை தீர உதவும் பைரவர் வழிபாடு



புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 7க்குள் அல்லது மதியம் 1 முதல் 2க்குள் அல்லது இரவு 8 முதல் 9க்குள் பைரவருக்கு வில்வமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வர வேண்டும்.பிரிவினை தீர்ந்து ஒன்றுசேரும் வரையிலும் இவ்வாறு செய்து வரவேண்டும்.



இழந்த சொத்துக்களை/பொருட்களை திரும்பப் பெற உதவும் பைரவர் வழிபாடு



பைரவர் திருமேனியின் முன்பாக,27 மிளகை சிறுதுணியில் சிறு மூட்டையாகக் கட்டி,அகல் விளக்(மண் விளக்கு)கில் வைத்து,நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ,தனது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வர இழந்த சொத்துக்கள்/பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.



செல்வச் செழிப்பு உண்டாகவும் நீண்டகாலக் கடன் தீரவும் உதவும் பைரவர் வழிபாடு



ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி(இராகு காலத்தில்) பைரவருக்கு உளுந்து வடை,பூசணிக்காய் சமைத்து வீட்டிலேயே பூசிக்கலாம்.(வீட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை மட்டுமே வழிபட வேண்டும்.படம் வேண்டுவோர் ஆன்மீகக்கடல் மின் அஞ்சலைத் தொடர்புகொள்ளவும்)ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை 330 முறை வீதம் ஒராண்டு வரை (52 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு) ஜபித்துவரவேண்டும்.அனுபவத்தில் மூன்று மாதங்கள் ஆனதுமே ,செல்வ வளம் உருவாக ஆரம்பிக்கிறது.

No comments:

Post a Comment