Monday, October 7, 2013

திருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்!!!










பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வரும் 26ம் தேதி பவுர்ணமியையொட்டி 16 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.பண்ருட்டி திருவதிகையில் 2000ம் ஆண்டு கால பழமை வாய்ந்த அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த பங்குனி மாதம் பவுர்ணமியன்று நான்கு மாட வீதிகளை பக்தர்கள் 16 முறை வலம் வந்து வணங்குதல் துவங்கியது. இதனையடுத்து 2ம் ஆண்டு பங்குனி மாத பவுர்ணமி வலம் வருதல் துவக்கம் வரும் 26ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி அன்று மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்து, மூலவர் நாகபரணத்திலும், அம்பாள் வெள்ளி கவசத்திலும் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது.நன்றி:தினமலர் 24.3.13

No comments:

Post a Comment