Thursday, October 24, 2013

பூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவப் பெருமான்!!!




பிரம்மனின் மகன் தட்சன்.தட்சன் தனது மகள் தாட்சாயணியை சிவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க மறுத்தப் பின்னரும்,சிவன்+தாட்சாயணி திருமணம் நடைபெற்றது.இதனால் கோபம் கொண்ட தட்சன் சிவனை அழைக்காமல் வேள்வி செய்தான்.தட்சன் வேள்வியின் அவிர்ப்பாகத்தை சிவனுக்குத் தரவில்லை;ஆனால்,பிரம்மாவோ அவிர்ப்பாகத்தை சிவனின் நந்திக்குக் கொடுத்துவிட்டார்.இதனால் மேலும் ஆவேசமடைந்த தட்சன் மேருவின் வடக்கே புதிய வேள்வி ஒன்றைத்துவங்கினான்.சிவனைத் தவிர,அனைத்து தேவர்களுக்கும்,ரிஷிகளுக்கும் அழைப்பு விடுத்தான்.அனைவருமே இந்த புதிய வேள்வியில் கலந்துகொண்டனர்.

தட்சனின் மகள் தாட்சாயணி அந்த புதிய வேள்விசாலைக்கு வந்து அவிர்ப்பாகத்தை சிவனுக்குத் தராமல் வேள்வி நடத்துவதே தவறு என்று தனது தந்தைக்குச் சுட்டிக்காட்டினாள்.ஆனால்,அனைவரது முன்பாகவும் தனது மகள் தாட்சாயணியை அவமானப்படுத்தினான் தட்சன்.இதனால் வேதனையடைந்த தாட்சாயணி அந்த யாகசாலையில் இருந்த அனைவருக்கும் சாபம் கொடுத்துவிட்டு, யாக குண்டத்தில் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாள்.

இதையறிந்த சிவன் கடும்கோபம் கொண்டார்.வீரபத்திரர் தலைமையில் ஒரு பெரிய படையை அனுப்பி யாகத்தை அழிக்கச் சொன்னார்.
வீரபத்திரரும் யாகம் நடைபெற்றுவந்த இடத்தை சின்னாபின்னப்படுத்தினார்.அங்கே இருந்த அனைவரையும் அடித்து நொறுக்கினார்.இந்திரன்,சந்திரன்,விஷ்ணு,எமன்,அக்னி,வாயு,குபேரன்,   வருணன் என்று அனைவரையும் வதம் செய்தார்;சூரியனின் கன்னத்தில் வீரபத்திரர் ஓங்கி அறைய சூரியனின் பற்கள் கீழே விழுந்தன.இறுதியில் மஹாவிஷ்ணுவின் வேண்டுகோளின் பெயரில் கோபம் தணிந்தார் வீரபத்திரர்.அது சமயம் அங்கே வருகை தந்த சிவன் இறந்தவர்கள் அனைவரையும் மன்னித்து உயிர்ப்பிச்சை அருளினார்.

பற்கள் இழந்த சூரியன் இந்த பாவம் தீர,சிவனிடம் பாவ விமோசனம் கேட்டார்.சிவன் சொன்ன உபதேசம் இது:- கார்த்திகை மாதம் முழுவதும் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமியை வழிபட்டால்,சிவத் துரோகத்தால் ஏற்பட்ட பாவம் போகும்
சூரியன் அதே போல இங்கே வந்து தங்கி கார்த்திகை மாதம் முழுவதும் ஸ்ரீவாஞ்சியம் வந்து தங்கினார்;இங்கே அமைந்திருக்கும் முனிதீர்த்தம் என்ற  குப்த கங்கையில் நீராடி வழிபட்டார்.இதனால்,சிவ அபவாதம் நீங்கியது.
மேலும்,கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கே வந்து வழிபட்டால் பஞ்சமாபாவங்களும் மன்னிக்கப்படும் என்று சிவன் வரம் அருளினார்.

ஸ்ரீயை வாஞ்சித்து பல ஆண்டுகள் மஹாவிஷ்ணு தவம் இருந்ததால் இந்த ஆலயம் ஸ்ரீவாஞ்சியம் என்று பெயர் பெற்றது.ஸ்ரீ என்பது மஹாலட்சுமியின் இன்னொரு பெயர் ஆகும்.

பொன்வண்டு உருவம் எடுத்து,1000 ஆண்டுகள் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஸ்ரீவாஞ்சீசரை வழிபட்டார்.இதனால்,அகமகிழ்ந்த ஸ்ரீவாஞ்சீசரர்,இங்கே இருப்பவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என்று வரம் தந்தார்.ஸ்ரீவாஞ்சீசரின் வாகனம் இங்கே எமதர்மன் ஆவார்.

எனவே,இங்கே வந்து வழிபடுபவர்களுக்கு எமவாதனை,பைரவ உபாதை கிடையாது.கடுமையான ராகு,கேது தோஷங்கள் இருப்பவர்கள் இங்கே வந்து முறைப்படி வழிபட அதிலிருந்து மீள்வார்கள்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் இங்கே வந்து தனது ஜன்ம நட்சத்திர நாட்களில் வழிபட்டால்,பைரவரின் ஆசியையும்,இந்த ஜன்மத்திலும் மறுஜன்மத்திலும் சிறந்த வாழ்க்கையைப் பெறுவார்கள்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment