Sunday, March 16, 2014

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு தந்த மூன்று வரங்கள்!!!





அந்தத் தம்பதி திருமணமான இரவே எதிர்காலத்தில் எப்படி யாரையும் சாராமல் வாழ்வது? என்ற நோக்குடன் இரண்டு மணி நேரம் வரை கலந்துரையாடினர்;முடிவில் இருவருமே தேர்வு எழுதி அரசு வேலையில் சேர்வது என்ற முடிவுக்கு வந்தனர்;திருமணமாகி நான்கு ஆண்டுகள் நகர்ந்தன;இருவருமே விடாப்பிடியாக தொடர்ந்து அரசுத் தேர்வுகள்,வங்கித் தேர்வுகள்,மத்திய அரசுத் தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளை எழுதிக் கொண்டே வந்தனர்;இருவருமே தனியார்வேலை பார்த்து கொண்டே இப்படி அரசுப்பணியில் சேர முயற்சித்துக் கொண்டே இருந்தனர்;

நான்காம் ஆண்டில் அவர்கள் நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்தனர்;சந்திப்பின் முடிவில்,அவர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறையை வீட்டில் செய்யத் துவங்கினர்;அதற்கு பைரவ மஹாசாஸ்த கல்ப வழிபாடு பாகம் 1 புத்தகம் கையேடாக இருந்தது; மிக எளிமையான அந்த வழிபாட்டுமுறையை ஒருநாள் கூடவிடாமல் பின்பற்றி வந்தனர்;

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் படத்தை நம்மிடமிருந்து வாங்கி,பிரேம் போட்டு,வீட்டில் வடக்கு நோக்கி வைத்தனர்;தினமும் அதிகாலையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரைப் போற்றும் சொர்ணபைரவ அஷ்டகத்தை 27 முறை பாடினர்;காலை 4.30 முதல் 5 மணிக்குள் காலைக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு,கிழக்கு நோக்கி ஒரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து,சொர்ணாகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக ஒரு நெய்தீபத்தை ஏற்றி வைத்தனர்;
முதலில் ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஓம் (அவர்களின் குல தெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் ஜபித்துவிட்டு,
சொர்ணபைரவ அஷ்டகத்தை 27 முறை மனதிற்குள் பாடினர்;இப்படி 27 முறை பாடிட,90 நிமிடங்கள் ஆயின;கணவன்,மனைவி இருவருமே இணைந்து இந்த வழிபாட்டுமுறையை தினமும் பின்பற்றி வந்தனர்;மனைவியானவர் ஒரு மாதத்தில் 27 நாட்கள் வரை வழிபட்டு வந்தார்;வழிபாட்டின் முடிவில் சமையல் செய்துவிட்டு,ஒரு கிண்ணத்தில் சமைத்த உணவை வைத்துக் கொண்டு,அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்த்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு படையலாக வைத்துவிட்டு,இருவரும் சாப்பிடும் பழக்கத்தைத் துவக்கினர்;பிறகு,அவரவர் வேலைகளுக்குப்புறப்பட்டனர்;இரவு வீடு திரும்பியதும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் படத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த அந்தப் படையலை எடுத்து,இன்னொரு தட்டில் வைத்து வீட்டின் வெளியே இருக்கும் ஒரு (கவிழ்க்கப்பட்ட) உரல் மீது வைத்தனர்;மறுநாள்,அந்த தட்டைக் கழுவி சுத்தப்படுத்தி,அன்று இரவுக்குப் பயன்படுத்தும் விதமாக வைத்துக் கொண்டனர்;

இப்படியே ஒரு வருடம் ஆனதும்,கணவருக்கு வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் நேர்காணல் வந்தது;அதில் தேர்வானார்;முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தை விடவும்  அதிக சம்பளத்தில் இங்கே வேலை கிடைத்தது;ரூ.5000/-சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு, இங்கே ரூ.8000/-ஆரம்பச் சம்பளமாக உயர்ந்தது.இரண்டு ஆண்டுகள் வரை விடாப்பிடியாக தொடர்ந்து சொர்ண பைரவ வழிபாட்டைப் பின்பற்றிவந்தனர்;மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்;இப்போது இவரது சம்பளம் ரூ.12,000/-ஆக உயர்ந்தது;மூன்றாம் ஆண்டின் முடிவில்,அதாவது சரியாகச் சொல்வதாக இருந்தால்,இரண்டு ஆண்டு ஒன்பது மாதங்கள் ஆன நிலையில்,இவர் அரசு போட்டித் தேர்வின் மூலமாக அரசு ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;அதற்கு அடுத்த இரண்டாம் மாதத்தில்,(இரண்டு ஆண்டு,பதினோராம் மாதத்தில்) இவரது மனைவியும் அரசு வேலையில் சேர்ந்தார்;பணியில் சேர்வதற்கான ஆணைகள் கிடைத்ததும்,தம்பதியராக ஐயா சகஸ்ரவடுகர் அவர்களிடம் நேரில் வந்து ஆசி பெற்றனர்.தொடர்ந்து ஒரு நாள் கூட விடாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வோம் என்று உறுதி கூறிவிட்டு புறப்பட்டனர்;



அந்த குடும்பத்திற்கு ராயல் சுப்பையா குடும்பம் என்ற பட்டம் நான்கு தலைமுறையாக உண்டு;(சுப்பையா என்பது உதாரணத்திற்காக! நிஜப் பெயர் வேறு).பெயரில் ராயல் இருப்பது போல,குடும்பத்திற்கு சகல வளங்களும்,சொத்துக்களும் உண்டு;அந்த தம்பதிக்கு இரு மகன்கள்,ஒரு மகள் இருக்கிறார்கள்.மூன்றாவதாகப் பிறந்த அந்த மகள் பட்டப்படிப்பை முடித்த கையோடு ஆங்கிலத்தில் கதை எழுதும் பழக்கம் உடையவர்;இணையத்தில் எதையாவது தேடிக்கொண்டே இருப்பது அந்த பட்டதாரி எழுத்தாளினியின் வழக்கம்;நமது ஆன்மீகக்கடல் வாசித்ததில் அவருக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யும் எண்ணம் தானாகவே தோன்றியது;பைரவ மஹாசாஸ்த கல்பவழிபாடு பாகம் 1 ஐ வாங்கினார்;
இவர் வாரம் ஒரு கதையை ஆங்கில மாத இதழ்களுக்கு அனுப்புவது வழக்கம்! இந்தப் பழக்கம் இவருக்கு 11 வகுப்பில் இருந்தே இருந்துள்ளது;ஆறு ஆண்டுகளில் இவர் அனுப்பிய எந்த ஒரு கதையும் தேர்வாகவே இல்லை;நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்தால் நமது கதைகள் தேர்வாகி மாத இதழ்களில் வெளிவரும் என்ற நம்பிக்கையில் வழிபாட்டைத் துவங்கினார்.


எந்தக் கோவிலுக்கும் செல்வதையே விரும்பாத தமது மகள் இப்படி திடீரென வழிபாடு செய்யத் துவங்கியது அவளது பெற்றோர்,சகோதரர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது;ஒரு அண்ணன் அடிக்கடி,எழுதி எழுதி போரடிச்சுருச்சா? எப்போ சாமியாரிணி ஆகப் போற? என்று கேலி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.இன்னொரு அண்ணன்,தங்கையின் இந்த போக்கிற்கான காரணத்தை அறிந்து அவன் ஆன்மீகக்கடலை வாசிக்க ஆரம்பித்தான்;ஒரு வருடம் ஆனது.மகளின் வழிபாட்டினால்,குடும்பத்தில் ஒவ்வொருவராக அசைவம் சாப்பிடுவதைக் கைவிடத் துவங்கினர்;ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆனதும்,அந்த எழுத்தாளினிக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஆங்கில மாத இதழ்களில் இருந்து அவரது கதை தேர்வானதாக தகவல் வந்தது;எழுத்தாளினியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை;


இன்னும் உற்சாகத்துடன்,தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வரும் அந்த எழுத்தாளினி,இந்தச் சம்பவத்தை அப்படியே தனது அடுத்த நாவலில் புகுத்த முடிவு செய்திருக்கிறாள்.தற்போது மாதம் ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வருகின்றனர்;அட்டவீரட்டானங்களுக்கு குடும்பத்தோடு செல்ல முடிவெடுத்துள்ளனர்;


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த மத்திய அரசு நிறுவனத்தில் இவர் தான் பணி மூப்புஅதிகம் உள்ளவர்;இருந்தும் கூட இவரது ஒரே ஒரு பலவீன சுபாவத்தால் இவரது பதவி உயர்வு தள்ளிப் போய்க் கொண்டேஇருந்தது;இடம் பொருள் பார்த்து பேசத் தெரியாததால்,இவரிடம் பேசவே அனைவரும் பயந்தனர்;வேலை சார்ந்த விஷயத்தைத் தவிர,வேறு எதையும் இவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இவர் அந்த மத்திய அரசு நிறுவனத்தில் தீவு போல வாழ்ந்து வந்தார்;


இந்தச் சூழ்நிலையில்,இவரது நண்பர் ஒருவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டு முறையை பிரிண்ட் எடுத்து இவரிடம் கொடுத்திருக்கிறார்.வாங்கி தனது பைக்குள் வைத்த இவர் ஒரு மாதமாக அதை வாசிக்கவே இல்லை;பேருந்து பயணத்தின் போது பிக் பாக்கெட் அடிக்க முயன்று பணமே இல்லாததால்,அந்த பையை பேருந்துக்குள்ளாகவே வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டான் அந்த பிக்பாக்கெட் திருடன்.கூட்ட நெரிசல் குறைந்ததுமே தனது தோளில் பையின் கைப்பிடி மட்டும் இருப்பதைக் கண்டு பதறிப்போனார்;தனக்கு எதிராக பேருந்தின் நடக்கும் பகுதியில் தனது பை கிடப்பதைப்பார்த்து,பாய்ந்து போய் எடுத்தார்;உள்ளே எல்லாம் இருக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் போது அந்த பிரிண்ட் அவுட்டை எடுத்து வாசித்திருக்கிறார்.


மறு நாளில் இருந்தே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைத் துவக்கியிருக்கிறார்.எட்டாவது மாதம் நிறைவடைந்து,ஒன்பதாவது மாதம் துவங்கியதுமே இவரது நிறுவனத்தில் பணி புரிந்த ஒவ்வொருவருக்குமே பணிமாறுதல் ஏற்பட்டது;பதிமூன்றாம் மாதத்தில் இவருடன் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு வேறு கிளைகளுக்கு பணிமாறுதல் பெற்றுப் போயிருந்தனர்;பத்தாவது மாதத்தில் இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இவரை ஒரு மனோதத்துவ பயிற்சி கருத்தரங்கிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.அங்கே கிடைத்த மனோதத்துவ டெக்னிக்குகள் மூலமாக இவர் தனது இயல்பு சுபாவத்தில் இருந்து மாறத் துவங்கியிருக்கிறார்.தான் உண்டு,தனது வேலை உண்டு என்று இருந்ததால் தான் தான் இடம் பொருள் பார்த்துப் பேசத் தெரியாதவர் என்றபெயர் வாங்கியிருப்பதை உணர்ந்து கொண்டார்;15 ஆம் மாதத்தில் தமது துறையின் தலைமைப் பொறுப்பு(செக்ஷன் மேனேஜர்)க்கு இவரை இவரது தலைமை நிறுவனம் தேர்வு செய்தது;சம்பளமும் இரண்டு மடங்கு அதிகரித்தது;இவரது ஆச்சரியத்திற்கு அளவே இல்லை;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு  செய்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று இன்னும் ஆச்சரியப்பட்டு,நமது கழுகுமலை கிரிவலத்திற்கு வருகை தந்தார்;அங்கே இவைகளை நம்மிடம் விவரித்தார்;


நமது நியாயமான கோரிக்கை/ஏக்கங்கள்/நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நிச்சயமாக அடைய முடியும்.(அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்;மது முதலான போதைப் பொருட்களையும் நிறுத்த வேண்டும்;பிறகே இந்த வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்).

நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களுடைய ஆசியோடும்,வழிபாட்டின் மூலமாக பலன்கள் பெற்றவர்களின் சம்மதத்தோடும் இந்த பதிவு வெளியிடப்படுகிறது.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Friday, March 7, 2014

இப்பிறவியிலேயே முக்தி கிட்டிட நாம் என்ன செய்ய வேண்டும்?





ஒரு துறவி குளக்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்;அப்போது மீன்கள் நீரின் மேல் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்;திடீரென அந்த இடத்திற்கு வந்த கழுகு கண் இமைக்கும் நேரத்தில் நீரில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மீனைக் கவ்விக் கொண்டு செல்வதை பார்த்தார்;அப்போது அவருக்கு ஞானம் பிறந்தது.
அந்த மீனைப் போல பக்தி என்னும் கடலில் மேலோட்டமாக இருந்தால் மீனுக்கு ஏற்பட்ட கதிதான் தனக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்தார்.எனவே, ஆழமான பக்திக்குச் சென்று பைரவப் பெருமானைச் சரணாகதி அடைந்தால் இப்பிறவியிலேயே முக்தி பெற முடியும் என்று நம்பினார்.அந்த நம்பிக்கையை ஒவ்வொரு நிமிடம் தோறும் வளர்த்து எடுத்து,ஒரே பிறவியில் பைரவ தரிசனமும் பெற்றார்;


ஆழமான பக்தியைப் பெற வயிறு நிறையச் சாப்பிடுதல்,தேவையில்லாத பேச்சு பேசுதல்,அடுத்தவரைப்பற்றி புறங்கூறுதல்,வம்பு பேசுதல்,தேவைக்கும் அதிகமாக பணம் சேர்த்தல்,அதை மேலும் மேலும் பெருக்குவதற்காக மட்டுமே சிந்தித்தல்;ஒழுக்கக் கட்டுப்பாடுவிதிகளை அதன் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் போன்ற விஷயங்களைத் தவிர்த்தாலே படிப்படியாக ஆழ்ந்த பக்தி மனதினுள் உருவாகிவிடும்.


வங்காள மொழியில் ஒரு பழமொழி உண்டு; நீங்கள் செய்யும் அனைத்து ஆன்மீகச் செயல்களும் மரண நேரத்தில் சோதிக்கப்படும்;மரண நேரத்தில் இறைவனை நினைவு கூர்ந்தால் வெற்றி நம் பக்கம்;
எனவே,நாம் ஒவ்வொருவரும் மரண பயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு ஆன்மீகத் தொண்டில் ஆழமாகச் செல்ல பைரவப் பெருமானைத் தஞ்சமடைவோம்.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Thursday, February 20, 2014

பைரவப் பெருமானின் அருளை உடனடியாகத் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு!!!



கேள்வி:ஐயா வணக்கம்! நான்  உங்கள் ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் வாசித்து வருகிறேன்.வளர்பிறை அஷ்டமி வழிபாடு பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

பதில்: பைரவப் பெருமானின் அருள் கிட்டிட தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்வது நன்று.அதுவும்,அந்த நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவரை வழிபாடு செய்தால் நமது பணம் சார்ந்த பிரச்னைகள் தீரும்;அப்படி நமது பணம் சார்ந்த பிரச்னைகள் தீர குறைந்தது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.

எமது ஆன்மீக ஆலோசனைப்படி,ஆன்மீகக்கடல் வலைப்பூவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தேய்பிறை அஷ்டமியைப் பற்றி தொடர்ந்து பிரபலப்படுத்தியும் வருகிறோம். அதன்படி,தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தொடர்ந்து 12 தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் அவரவர் ஊர்களுக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ சன்னதிகளுக்குச் சென்று வழிபாடு செய்து தமது கடன் பிரச்னை,வராக்கடன்கள் வசூலாகுதல்,கொடுக்க வேண்டிய கடன்களைக் கொடுத்தல் போன்றவை தீர்ந்தும் வருகின்றன.அவ்வாறு பிரச்னைகள் தீர்ந்தவைகளைப் பற்றி தினமும் ஏராளமானவர்கள் எமக்கு போனில் தெரிவித்து நன்றி கூறியும் வருகின்றனர்.

இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்னவெனில்,தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ராகு கால நேரத்தில் பல ஆலயங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வதில்லை;
அதற்கு முதல் காரணம்: இது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது;
இரண்டாவது காரணம்: பெரும்பாலும் மதிய நேரத்தில் ராகு காலம் வருவது;
 மூன்றாவது காரணம்: தேய்பிறை அஷ்டமியானது ஒரு முழு நாளில் வருவது குறைவு;ஒருநாள் மதியம் அல்லது மாலையில் துவங்கி மறுநாள் மதியம் அல்லது மாலை வரை அமைகிறது.இதனால்,பல ஆலயங்களில் முதல் நாளே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்து வருகின்றனர்.

வளர்பிறை அஷ்டமியைப் பொறுத்தவரையில் தொடர்ந்து ஆறே ஆறு வளர்பிறை அஷ்டமிகளுக்கு மட்டும் பைரவ வழிபாடு செய்தால் போதுமானது.நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாகத் தீர்ந்துவிடும்.

மேலும் வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவ வழிபாடு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை;வளர்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கும் ஒரு நாளில் எந்த நேரத்திலும் பைரவ வழிபாடு செய்யலாம்.

பைரவ வழிபாடு செய்வதற்கு உரிய பொருட்கள் பட்டியல் வருமாறு:
அத்தர்
புனுகு
ஜவ்வாது
சந்தனாதித்தைலம்
செவ்வரளிமாலை
பால்
அரகஜா
இவைகளைக்கொண்டு பைரவ வழிபாடு செய்ய வேண்டும்.

அபிஷேகம் செய்யும் போது நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கேள்வி:மிக்க நன்றிகள் ஐயா,மிகவும் மகிழ்ச்சிகள் ஐயா! ஒரு சிறு சந்தேகம். . .கேட்கலாமா ஐயா?

பதில்:கேளுங்கள்

கேள்வி: வளர்பிறை அஷ்டமி நாளில் சொர்ண பைரவரைத்தான் வழிபட வேண்டுமா? இல்லை காலபைரவரை வழிபடலாமா?

பதில்:தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமிகளுக்கும் உங்கள் ஊரில் அமைந்திருக்கும் எந்த ஒரு பைரவப்பெருமானையும் வழிபடலாம்;ஆனால்,நீங்கள் முதல் வளர்பிறை அஷ்டமி நாளன்று எந்த பைரவப் பெருமானை வழிபடுவீர்களோ,அவரையே ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களும் வழிபட வேண்டும்.மாற்றக்கூடாது.

கேள்வி:அப்போ காலபைரவரை முதல் வளர்பிறை அஷ்டமியன்று வழிபாடு செய்தால் ஆறு வளர்பிறைக்கும் அவரையே தான் வழிபாடு செய்ய வேண்டுமா?

பதில்:ஆமாம்

கேள்வி: ஐயா(தலையைச் சொறிந்தவாறு) என் தம்பி காரைக்குடியில் வசித்து வருகிறான்.அவன் சொர்ண பைரவர் மீது ரொம்ப பாசத்தோடு இருக்கான்;அவனை இலுப்பைக்குடிக்கு தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமிக்குச் சென்று வழிபாடு செய்யச் சொல்லலாமா?

பதில்:அதுதான் சரி

கேள்வி: ஐயா! எங்க அண்ணனுக்கு துலாம் ராசி,விசாகம் நட்சத்திரம்.ஏழரைச்சனியால் ரொம்ப கஷ்டப்படுகிறார்.அவருக்கு ஏதாவது பைரவ பரிகாரம் சொன்னால் நல்லாயிருக்கும். . .

பதில்:அவரை அசைவம் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு,ஆறு வளர்பிறை அஷ்டமிக்கு அவர் ஊரில் இருக்கும் பைரவப் பெருமானை வழிபாடு செய்யச் சொல்லுங்கள்;அவரது கஷ்டங்கள் பறந்தோடிவிடும்.

கேள்வி:ஐயா,கடைசியாக ஒரு சந்தேகம்?

பதில்:(புன்னகைத்தவாறு) கேளுங்க

கேள்வி:ஒருவரே வளர்பிறை அஷ்டமிக்கும்,தேய்பிறை அஷ்டமிக்கும் பைரவ வழிபாடு செய்யலாமா?

பதில்:வளர்பிறை அஷ்டமி வழிபாடு செய்பவர்கள் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது.உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் வளர்பிறை அஷ்டமி வழிபாட்டிலேயே கிடைத்துவிடும்.வரும்.8.3.14 சனிக்கிழமை காலை 9.44 முதல் 9.3.14 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை வளர்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கிறது.

கேள்வி:ரொம்ப நன்றிங்கய்யா,எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க

Monday, February 17, 2014

பைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை!!!



எந்த வழிபாடு செய்தாலும்,வழிபாட்டின் முக்கிய அம்சமே நமது மனதிற்குள் உருவாகும் நம்பிக்கையே! ஒரு பழமையான சிவாலயம் சென்று வழிபடும் போது நமது நம்பிக்கையே அங்கே இருக்கும் தெய்வ சக்திகளால் கவனிக்கப்படுகிறது.நம்பிக்கையில்லாமல் கடனே என்று வழிபட்டால் நமது கோரிக்கைகள் இறை சக்தியால் கவனிக்கப்படுவதில்லை;

ஒரு சாலையோர விநாயகர் கோவிலுக்கு தினமும் மனப்பூர்வமான நம்பிக்கையோடு சென்று நமது கோரிக்கையை வைத்தால் நிச்சயம் நமது நம்பிக்கை நிஜமாகும்.

நமது நம்பிக்கையை எப்படி மனதிற்குள் உருவகப்படுத்த வேண்டும் தெரியுமா?

எது நம்முடைய லட்சியமோ அதை அடைந்துவிட்டதாக நாம் திரைப்படம் போல கற்பனை செய்ய வேண்டும்.அவ்வாறு ஒவ்வொரு நாளும் நினைக்கும் போது அந்த லட்சியம் நிறைவேறியதற்காக நாம் இப்போது வழிபடும் தெய்வத்திற்கு நன்றியும் கூறும் விதமாக சிந்திக்க வேண்டும்.இதைத்தான் மனோதத்துவ டெக்னிக்குகளில் Creative Visuvalization என்று கூறுகிறார்கள்.இப்படி தினமும் அந்த சாலையோர விநாயகர் கோவிலில் வழிபடும் போது(சாமி கும்பிடும்போது) திரைப்படம் போல நினைக்கும் போது ஒரு சில நாட்களில் நமது ஆழ்மனம் விழிக்கும்;அப்படி விழிக்கும் போது நமது ‘லட்சியம் நிறைவேறும் விதமான நமது கற்பனைத் திரைப்படம்’ நமது ஆழ்மனதிற்குள் பதிந்துவிடும்;அப்படி ஒரே ஒருமுறை பதிந்துவிட்டாலே அடுத்த சில நாட்கள்/வாரங்களில் நமது லட்சியம் நிஜமாகத் துவங்கும்.

எப்போதும் ஒரு தெய்வத்தை தினமும் வழிபாடு செய்யும் போது ஒரே ஒரு கோரிக்கையோடு மட்டுமே வழிபட வேண்டும்.அது நிறைவேறிய பின்னரே அடுத்த கோரிக்கையை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்.


ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது இப்படி கற்பனை செய்ய வேண்டியதில்லை;ஏனெனில்,தொடர்ந்து நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;உங்கள் தலைவிதியை நீங்களே மாற்றிடக் காரணமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.மேலும்,ஸ்ரீகால பைரவப் பெருமானைத்தவிர,வேறு எந்த தெய்வத்தை வழிபடச் சென்றாலும் நமது ஒரே ஒரு கோரிக்கையை திரும்பத் திரும்ப நினைத்து வேண்டிக்கொண்டே இருந்தால் தான் அது நிறைவேறும்.

ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது எந்த கோரிக்கையும் இல்லாமல் திறந்த மனதுடன் போனாலே போதும்.இதுவும் சரணாகதி தத்துவத்தின் ஒரு அங்கமே!

நம்மை படைத்தவருக்குத் தெரியாதா? எதை நமக்கு முதலில் தர வேண்டும்; எதை நமக்கு இறுதியில் தர வேண்டும் என்று!!

நம்மைப் படைத்தவர் பிரம்மாதான்.அதே பிரம்மாதான் நாம் இப்பிறவியில் இந்த ஆத்மா ஸ்ரீகாலபைரவப் பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்து தனது காலத்தையே மாற்றிடப் பிறந்திருக்கிறது என்றும் நமது தலையெழுத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார்.

Wednesday, February 12, 2014

பைரவ கணமாக ஒரு சுலபமான வழிபாட்டுமுறை



இந்த பிறவியிலேயே பைரவப் பெருமானின் அருளைப் பெற நீங்கள் விரும்பினால்  ஒரே ஒரு வழிமுறையைப் பின்பற்றினாலே போதுமானது;அது:-

 அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக்கைவிட்டுவிட வேண்டும்;மது அருந்துவதையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்;தமிழ்ப்பண்பாட்டை விடாப்பிடியாகப் பின்பற்ற வேண்டும்.இந்த தினசரிக் கொள்கைகளோடு மாதம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நோட்டில் எழுதி வர வேண்டும்.இன்று முதல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எழுதி வந்தாலே போதுமானது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை பின்வரும் விதமாகவே எழுத வேண்டும்.
ஓம்(உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும்
ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று 108 முறையும்
ஓம் அண்ணாமலையே போற்றி என்று ஒருமுறையும் எழுதி முடிக்க வேண்டும்.இப்படி எழுதுவதை நமது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கலாம்;ஆனால்,வெளிவட்டார நட்புக்களிடம் ஒருபோதும் காட்டக் கூடாது;

தினமும் இந்த 108முறை எழுத ஆரம்பித்தால்,எக்காரணம் கொண்டும் எழுதி முடிக்கும் வரை வேறு வேலையில் கவனம் சிதறக் கூடாது.செல்போன் பேசக் கூடாது.டிவி பார்த்துக் கொண்டே எழுதக் கூடாது;ரேடியோ கேட்டுக்கொண்டே எழுதக் கூடாது.ஒரு நாளில் உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் எழுதலாம்;

18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இந்த மந்திரத்தை எழுத வேண்டும்.அதை விடக் குறைந்தவர்கள் எழுதக் கூடாது.ஒருபோதும் சிகப்பு,கறுப்பு நிறப்பேனாக்களால் எழுதக் கூடாது;நீல நிறப் பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்.பூஜை அறையில் அமர்ந்து எழுத வேண்டும்.
அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் தினமும் இந்த 108 ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுத சிறந்த நேரம் ஆகும்.

தீட்டு வீடுகளுக்குச் சென்று கலந்து கொண்டால் ஒன்பது நாட்கள் வரை எழுதக் கூடாது.பத்தாவது நாளில் இருந்து எழுதத் துவங்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை எழுதிக்கொண்டே வந்தால்,நமக்கு நமது பிறவி சுபாவத்திற்கேற்றவிதமான ஆன்மீக குரு கிடைப்பார்;(பழமொழி:சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார்).அதன் பிறகு,நமது வாழ்க்கையில் துரோகம்,ஏமாற்றம்,பண நெருக்கடி,குடும்பக் குழப்பம் என்று எதுவும் ஏற்படாது;நமது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகிவிடும்;கர்மவினைகளும் கரையத் துவங்கும்;


ஐந்து ஆண்டுகள் வரை தினமும் எழுதிக்கொண்டே வந்தால்,நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சும உலகத்தோடு தொடர்பு உண்டாகும்; நமது பிறவிகுணத்தில் இருக்கும் தீய குணங்கள் மறைந்துவிடும்;நமது மனநிலை,உடல் நிலை முழுக்க முழுக்க மென்மையும்,ஆன்மீகச் சூழ்நிலைக்கு ஏற்றவிதமாக உருமாறிவிடும்;நிச்சயமாக அட்ட வீரட்டானங்களுக்கு உங்களின் ஆன்மீக குருவோடு பயணிக்கும் சந்தர்ப்பம் அமையும்;அட்டவீரட்டானங்களுக்குப் போய்த் திரும்பியப் பின்னர் என்ன நடக்கும் தெரியுமா?

நீங்கள் இது வரை எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்துள்ளீர்கள்?

எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன தவறுகள் செய்தீர்கள்?

அந்தத் தவறுகளால் இப்பிறவியில் என்னென்ன விதமான கஷ்டங்கள்,அவமானங்கள்,வேதனைகளை அனுபவிக்கிறீர்கள்? 

அனுபவிக்கப் போகிறீர்கள்? என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்?

எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன புண்ணியம் செய்தீர்கள்?

அந்த புண்ணியங்களால் இப்பிறவியில் உங்களுக்கு கிடைத்திருக்கும் சொத்துக்கள்,திறமைகள்,அதிர்ஷடங்கள் என்னென்ன? இனிமேல் என்னென்ன கிடைக்க இருக்கிறது? என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.

எதனால் இந்த அதிசயம் நிகழும் தெரியுமா? நீங்கள் தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுதுவதன் மூலமாக காலத்தை இயக்கும் கடவுளான காலபைரவப் பெருமானைச் சரணடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

30 ஆண்டுகள் வரை தினமும் 108 முறை எழுதிவிட்டீர்கள் எனில் நிச்சயமாக நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள்இன்னும் ஏராளமான ஆச்சரியங்களை இந்தப் பிறவியிலேயே காண்பீர்கள்;அவைகளை இங்கே பகிரங்கப்படுத்த முடியாது.ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு மனக்குறை என்று எதுவுமே இராது.ஆரம்பிப்போமா?

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Sunday, January 12, 2014

கார்த்திகை நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!




நவக்கிரகங்களில் முதல்வராக இருப்பவர் சூரியன்;அந்த சூரியன் என்ற ரவி ஜாதகப்படி உச்சமடைவது கார்த்திகை நட்சத்திரத்தில்!!! கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியிலும்;இரண்டு,மூன்று,நான்காம் பாதங்கள் ரிஷபராசியிலும் அமைந்திருக்கிறது.இதனால்,ஜோதிடக் கலையானது கார்த்திகை நட்சத்திரத்தை தலையற்ற நட்சத்திரம் என்று வகுத்திருக்கிறது.

முதல் ராசியான மேஷராசியில் கார்த்திகை முதல்பாதமும்,ரிஷபராசியில் கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்களும் அமைந்திருப்பதில் ஒரு மானுட சூட்சுமம் ஒளிந்திருக்கிறது; ரத்தகாரகனாகிய செவ்வாயின் முதல் ராசி மேஷம்;சுக்கிலக்காரகனாகிய சுக்கிரனின் முதல் ராசி ரிஷபம்;இரண்டு ராசிகளையும் இணைப்பதோ கார்த்திகை நட்சத்திரம்!

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ரத்தமும்,சுக்கிலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் தான் முதுமைக் காலத்திலும் ஆரோக்கியமாக வாழ முடியும்;இந்த தெய்வீக ஜோதிட ரகசியத்தை அறிந்த நமது முன்னோர்கள் கார்த்திகை வழிபாட்டைத் துவக்கினர்;
அதனால் தான் பல கோடி வருடங்களாக தமிழ் மக்கள் கார்த்திகை அன்று செவ்வாயின் அதிதேவதையான முருகக் கடவுளை வழிபட்டு வருகின்றனர்;நட்சத்திர பைரவர்கள் வரிசையில் கார்த்திகை நட்சத்திரத்திற்கும்,அனுஷம் நட்சத்திரத்திற்கும் உரிய பைரவப் பெருமான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் அமைந்திருக்கிறார்;
பஞ்சபூதங்களில் அக்னி மலையாக இருப்பது அண்ணாமலை! அண்ணாமலையில் உள்பிரகாரத்தில் பள்ளியறைக்கு அருகில் அமைந்திருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான்! இவரே கார்த்திகை நட்சத்திரத்துக்குரிய பைரவர் ஆவார்;

கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் அளவற்ற முன்கோபிகளாக இருப்பார்கள்;இதில் விதிவிலக்குகளும் உண்டு;ஏனெனில்,மேஷராசியில் சூரியன் சித்திரை மாதத்தில் சஞ்சாரிப்பார்;சித்திரை மாதத்தில் கடைசிவாரத்தில் சூரியன் கார்த்திகை 1 ஆம் பாதத்தினைக் கடக்கும் போது நாம் அதை அக்னி நட்சத்திரமாகக் கொண்டாடுகிறோம்;

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்(மேஷராசியினரும்;ரிஷபராசியினரும்) கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் அண்ணாமலையில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை பின்வரும் பொருட்களால் வழிபட்டு வர அனைத்து முற்பிறப்பு கர்மாக்களும் தீர்ந்துவிடும்;கூடவே,கிரிவலமும் செல்வது நன்று.அல்லது கிரிவலம் மட்டுமாவது அடிக்கடிச் செல்வது சிறப்பு;

அத்தர்

புனுகு

ஜவ்வாது

சந்தனாதித்தைலம்

செவ்வரளிமாலை

பால்

அரகஜா

தேன்

செவ்வாழைப்பழங்கள்

மரிக்கொழுந்து

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ