Tuesday, November 26, 2013

பண நெருக்கடிகளைத் தீர்க்கும் ஸ்ரீகாலபைரவ வழிபாடு!!!

தினமும் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது;விலைவாசி உயர்வால்,சம்பளம் வாங்குபவர்களின் நிலையோ பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது;இல்லத்தரசிகளில் நிலையோ இன்னும் பரிதாபமே!! 

வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுப்பதில் குளறுபடியோ,குறைவோ வந்தால் தான் பெரும்பாலான தம்பதிகளுக்குள் சண்டை வருகிறது;இந்த சண்டையால் குழந்தைகளின் ஆளுமைத் திறன் பாதிக்கப்படுகிறது;ஆளுமைத் திறன் பாதிப்பால் சராசரிக்குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்களாகவோ,எதற்கும் துணிந்த முரடர்களாகவோ மாறுகிறார்கள்;தனது தரப்புக்கு நியாயம் கேட்கச் செல்லும் தம்பதிகள் பிறரின் ஆலோசனைகளைப் பின்பற்ற ஆரம்பித்து நிரந்தரமாகப் பிரியும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.இந்த சூழ்நிலையில் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி போதுமான வருமானம் வராதது தான்!

இதைச் சரி செய்வதற்காக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் ஒரு எளிய அதே சமயம் சக்தி வாய்ந்த சுயவழிபாட்டைத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து 6புதன்கிழமைகளுக்கு மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் ஸ்ரீகால பைரவ சன்னதிக்குச் செல்ல வேண்டும்;அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித் தைலம் இவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்;

27 உளுந்து வடைகளால் ஒரு மாலையை அணிவிக்க வேண்டும்;உளுந்து வடைகளை நமது வீட்டில் தயார் செய்து கொண்டு வர வேண்டும்; மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;பாசிப்பயறு சுண்டல் வீட்டில் அவித்து ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்குப் படையல் இட வேண்டும்;நமது பெயருக்கும்,நமது குடும்பத்தாரின் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,படையல்களை அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;வீட்டிற்குக் கொண்டுச் சென்று நமது ரத்த உறவுகளுக்கும்,அண்டைவீட்டார்,நட்பு வட்டத்தினருக்கும் தரலாம்.

நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருக்க வேண்டும்;தமிழ்ப் பண்பாடான ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையை விடாப்பிடியாக பின்பற்ற வேண்டும்;மது,போதைப் பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.இந்த மூன்று கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு இந்த கால பைரவ வழிபாடு ஆறாவது புதன் கிழமையில் இருந்து 90 நாட்களுக்குள் அபரிதமான பலன்களை வாரி வழங்கும்;ஆமாம்! (சொர்ண ஆகர்ஷணத்தை)பணப்புழக்கம் இவர்களுக்கு படிப்படியாக உயர்ந்து,வளமான வாழ்க்கையை அடைவார்கள்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


No comments:

Post a Comment