tag:blogger.com,1999:blog-4208700948221453639.post7523473396266335558..comments2022-04-01T14:16:53.517-07:00Comments on ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ: பைரவ விழாக்களில் முக்கியமானது சம்பா சஷ்டி!Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4208700948221453639.post-70861796965781733782014-03-26T09:38:02.691-07:002014-03-26T09:38:02.691-07:00நல்ல விளக்கம்
இருப்பினும் பைரவர் பிறப்பு பற்றி கு...நல்ல விளக்கம் <br />இருப்பினும் பைரவர் பிறப்பு பற்றி குறிப்பு கீழ்கண்ட வாறு படித்துள்ளேன் பைரவர் பிறப்பு : <br /><br />அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் <br />பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.<br /><br />தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான்.<br /><br />உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.<br />பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்<br />டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத்<br />துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள்<br />உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்vpoompalanihttps://www.blogger.com/profile/16145149826282215519noreply@blogger.com